Connect with us

தனுஷ், சிம்பு உட்பட 4 நடிகர்களுக்கு ரெட் கார்டு வழங்க முடிவு

செய்திகள்

தனுஷ், சிம்பு உட்பட 4 நடிகர்களுக்கு ரெட் கார்டு வழங்க முடிவு

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க செயற்குழு கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் நடிகர்கள் தனுஷ், சிலம்பரசன், விஷால், அதர்வா முரளி ஆகியோருக்கு ரெட் கார்டு நோட்டீஸ் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

சிம்பு மீது ஏற்கனவே பலமுறை புகார் அளித்து பேச்சுவார்த்தை நடத்தியும் முடிவடையாத மைக்கேல் ராயப்பன் பிரச்சனையை மேற்கோள்காட்டி அவருக்கு ரெட் கார்டு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

நடிகர் விஷால் தயாரிப்பாளர் சங்க தலைவராக இருந்த போது சங்க பணத்தை முறையாக வரவு செலவு கணக்கு வைக்காதது தொடர்பாக அவருக்கும் ரெட் கார்டு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

நடிகர் தனுஷ், தேனாண்டாள் முரளி தயாரிக்கும் படத்தில் ஏற்கனவே 80 சதவீத படப்பிடிப்பு முடிந்த நிலையில் படப்பிடிப்புக்கு வராமல் தயாரிப்பாளருக்கு நஷ்டம் ஏற்படுத்தியதாக ரெட் கார்டு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

தயாரிப்பாளர் மதியழகன் கொடுத்த புகாரில் முறையாக பதில் அளிக்காமல் நழுவுவதால் அதர்வா முரளிக்கு ரெட் கார்டு வழங்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பாக பலமுறை பேச்சுவார்த்தை நடத்தியும் ஒத்து வராததால் அவர்கள் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தயாரிப்பாளர்கள் புகார் தெரிவித்தனர்.

இந்நிலையில் நேற்று நடைபெற்ற தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க செயற்குழு கூட்டத்தில் பரிசீலனை செய்யப்பட்டு, நடிகர்கள் தனுஷ், விஷால், சிலம்பரசன், அதர்வா முரளி ஆகியோருக்கு ரெட் கார்டு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in செய்திகள்

To Top